09-07-2008 Wednesday  
 

இந்தியாவே! இந்தக் கொடுமை ஏனோ?

     

வெள்ளைவான் கடத்தல்களுக்கு
அரசும் படையினருமே பின்னணி!
ஆதாரங்களுடன் சகல விவரங்களும்
சபைக்கு வரும் என்று ஐ.தே.க. சூளுரை

 
நாட்டில் இடம்பெற்று வரும் வெள்ளைவான்களில் ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகளுக்கு அரசும் இராணுவத்தினருமே பின்னணி என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி.
     
குண்டு துளைக்காத வாகனங்கள்
பிள்ளையானிடமும் உள்ளனவா?
ஐ.தே.க. கேள்வி; பதிலளிக்க அரசு மறுப்பு
 
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கு அரச குண்டுதுளைக்காத வாகனங்களை வழங்கியிருக்கின்றதா என்று ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது. எனினும் அதைப் பற்றி எதுவும் கூறமுடியாது என்று அரசின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா மறுத்துவிட்டார்.
     
எண்ணை அகழ்வு ஒப்பந்தத்தின்
விவரம் இன்று நாடாளுமன்றத்தில்!
 
இலங்கையில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்காக இலங்கை அரசு இந்தியாவுடன் நேற்றுமுன்தினம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் முழு விவரம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
     

இந்தியாவுடன் முறையற்ற ஒப்பந்தம்;
நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்து!
சபையில் விமல் வீரவன்ஸ அபாயச்சங்கு!

 
இலங்கையில் எண்ணெய் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான இந்தியாவுடனான ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொள்ளாது முறையற்ற விதத்தில் செய்யப்பட்டுள்ளது என்றும்
     

மன்னார் கடலில் பிரச்சினை இல்லை;
இந்திய நிறுவனத்திற்கு அரசு சிபார்சு!

 

மன்னார் கடலில் பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் இல்லை என்று அங்கு எண்ணெய் அகழ்வுப் பணியை மேற்கொள்ளும் உரிமையைப் பொறுப்பேற்றுள்ள கெயர்ன் இந்தியா நிறுவனத்திற்கு இலங்கை அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

     

திருகோணமலையில்
வர்த்தகர் கொலை

 
திருகோணமலை சிவபுரிப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 வயதுடைய வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார்.
     

கூட்டமைப்பு எம்.பிக்கள்
இருவருக்கு விடுமுறை

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஜெயானந்தமூர்த்தி மற்றும் வன்னி மாவட்ட எம்.பி. கனகரட்ணம் ஆகியோர் நேற்றிலிருந்து தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க நாடாளுமன்றத்தால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
     

புதிய பிரதி சபாநாயகராக
ஆளுங்கட்சியின் பிரியங்கர

 
கீதாஞ்ஜன குணவர்தன பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட எம். பி. பிரியங்கர ஜயரட்ண புதிய பிரதி சபாநாயகராக ஏகமனதாக நேற்று நாடாளுமன்றில் தெரிவு செய்யப்பட்டார்.
     

ஜே.வி.பி. அலுவலகம்
அ'புரத்தில் தீக்கிரை

 
அநுராதபுரம் கலன் பிந்துனுவௌ வில் உள்ள ஜே.வி.பியின் கட்சி அலுவலகம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இனந்தெரியாதவர்களால் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
     

குஞ்சுப்பரந்தனில் வான் தாக்குதல்
குடும்பஸ்தர் காயம்; வயல்கள் நாசம்

 
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பரந்தன் பூநகரி வீதியில் குஞ்சுப்பரந்தன் சந்திப் பகுதியில் விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்கள் நேற்றுக்காலை 10.05 மணியளவில் தாக்குதல் நடத்தின. அதில் பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்தார். விவசாய நிலங்களும் சேதமடைந்தன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
     

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு
ஊடக அமைப்புகளும் ஆதரவு

 
நாளை நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐந்து பிரதான ஊடக அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இது தொடர்பாக அந்த அமைப்புகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
     

நாளைய பணிப்புறக்கணிப்புக்கு
ம.ம. முன்னணி ஆதரவு தராது!
அக்கட்சி நேற்று அறிவிப்பு

 
சம்பள அதிகரிப்புக் கோரி நாளை நடத்தப்படவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்கப்போவதில்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
     

வவுனியாவில் நேற்று
இரு சிப்பாய்கள் பலி!

 
வவுனியா,அரசடிக்குளம் காந்திநகர் வீதியில் நேற்றுப் பிற்பகல் 1.35 மணியளவில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு இராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
     
     

Tamil Font
Unicode

 
 
Google