n
 
     
  28-08-2008 Thursday  
 

பெரும் ஆப்பாக வருகின்றது
ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை

     

புலிகளின் விமானத் தாக்குதலில்
திருமலையில் 6 படையினர் சாவு
துருப்பினர் 24 பேர் வரை காயம்
உணவு விடுதி மீது குண்டு வீழ்ந்தது

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானம் திருகோணமலை கடற்படைத் துறைமுகம் மீது @நற்று முன்தினம் இரவு நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் ஆறு கடற்படையினர் உயிரிழந்தனர் என்றும், 24 துருப்பினர் வரை படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
     
ஜி.சீ.ஈ. உயர்தர விடைத்தாள் மதிப்பீடு:
ஆசிரியர்கள் தொடர்ந்து பகிஷ்கரிப்பு
 
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் இரண்டாம் கட்டப்பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டபோதும் ஆசிரியர்கள் அப்பணியை நேற்றும் முற்றாகப் பகிஷ்கரித்து விட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
     

மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போரை
நசுக்கவே மனோ கணேசன் மீது விசாரணை
எதிர்க்கட்சித் தலைவர் சீற்றம்

 
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஓயாது குரல் கொடுக்கும் மனோ கணேசன் எம்.பியின் குரலை நசுக்கும் அரசின் சதித்திட்டத்தின் ஓரங்கமாகவே அவரிடம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணை அமைந்துள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
     

மட்டு. நாவற்குடாவில்
வர்த்தகர் படுகொலை

 

மட்டக்களப்பு, காத்தான்குடி, நாவற்குடாப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார். அழகையா யோகநாதன் (வயது 37) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

     

வாழைச்சேனையில்
இளைஞர் கடத்தல்

 
மட்டக்களப்பு, வாழைச்சேனை முருகன் கோவிலடிப்பகுதியில் வெள்ளைவானில் வந்த இனந்தெரியாத நபர்களால் இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் கடத்திச் செல்லபபட்டுள்ளார்.
     

நாச்சிக்குடா பகுதி மீது
கிபீர் குண்டுத் தாக்குதல்

 
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, நாச்சிக்குடா பகுதிமீது நேற்றுக்காலை 9.30 மணியளவில் விமானப்படையினரின் ஜெற் விமானங்கள் தாக்குதலை நடத்தின.
     

2,800 மெற்றிக்தொன் உணவுவகை
கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு தேவை

 
படையினரின் போர் நடவடிக்கைகள் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு, 2,800 மெற்றிக்தொன் உணவு தேவைப்படுகின்றது என உதவி அமைப்பொன்றின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
     

நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமாயின்
வன்முறைக் கலாசாரத்தை ஒழித்துவிட வேண்டும்
எம். ரி. ஹஸன் அலி கூறுகிறார்

 
"பிச்சைக்காரன் பிச்சையெடுக்கும் உத்தியாக பழைய சிரங்கை ஆறவிடாது பாதுகாத்துக் கொள்வது போல இந்நாட்டிலுள்ள தேசியக் கடும் போக்காளர்கள் இனப்பிரச்சினைகளை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு அதனைக் காட்டி வாக்கு பிச்சை கேட்பது வழமையாகியுள்ளது.''
     

விடுதலைபுலிகளின் வான் தாக்குதலில் காயமடைந்த
7 படையினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

 
திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது நேற்றுமுன்தினம் விடுதலைப் புலிகளின் நடத்திய வான் தாக்குதலில் காயமடைந்த படையினரில் 7 பேர் திருகோணமலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளனர்.
     

வன்னியிலிருந்து நான்கு இளைஞர்கள்
நேற்றுப் படகு மூலம் இராமேஸ்வரத்திற்கு!

 
வன்னிப் பிரதேசத்தில் இருந்து நேற்று 4 இளைஞர்கள் படகு மூலம் இராமேஸ்வரதிற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். கிளிநொச்சி, பூநகரி மற்றும் செம்மாங்குன்று ஆகிய பகுதிகளிலிருந்தே இந்த இளைஞர்கள் முற்பகல் 10.30 மணியளவில் பிளாஸ்டிக் படகு ஒன்றில் இராமேஸ்வரம் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

கற்றல் மத்திய நிலையங்களின் செயற்பாடுகளை
வினைத்திறனுடன் முன்னெடுக்க நடவடிக்கை

 
நாடளாவிய ரீதியில் கல்விக் கோட்டப் பிரிவுகளில் இயங்கிவரும் சமூக கற்றல் மத்திய நிலையங்களின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சின் முறைசாராக் கல்விப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
     

சொந்த மண்ணில் தோல்வியுற்ற பரிதாபம்
ஐந்தாவது ஆட்டம் முடியும் முன்னரே
தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!
நேற்று 46 ஓட்டங்களால் இலங்கை தோல்வி

 
இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நேற்று ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 46 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் அது தொடரை 3:1 என்ற விகிதத்தில் தனதாக்கிக் கொண்டுள்ளது.
     

வவுனியாவில் கப்பம் பெற
முயன்ற குழு சிக்கியதாம்

 
வவுனியா குடியிருப்பு பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணிடம் 10 இலட்சம் ரூபா பணத்தை ஆயுதமுனையில் கப்பமாகப் பெறமுயன்ற, விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 3பேரை இராணுவத்தினர் சுற்றிவளைத்துப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர் என இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
     

மன்னார் ஆயர் அனுப்பிவைத்த
கூரைவிரிப்புகளுக்குத் தடை

 
படைநடைவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து மரநிழல்களின் கீழும், பொது இடங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பினால் அனுப்பி வைக்கப்பட்ட கூரை விரிப்புக்கள் ஓமந்தைசோதனைச்சாவடியில் படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
     
ரணிலின் வாகனத்துடன் விபத்து
பத்திரிகையாளர் படுகாயம்
 
புத்தளம் ஆனமடுவ பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பத்திரிகையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
     

துணுக்காயில் கிளைமோர்
ஒருவர் பலி; மூவர் காயம்

 
துணுக்காய் புத்துவெட்டுவானில் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
     
     

Tamil Font
Unicode

 
 
Google